/* */

கூடலூர் கொரோனா சிகிச்சை மையத்தில் தரமற்ற உணவு? ஆய்வுக்கு வந்த அதிகாரியுடன் நோயாளிகள் வாக்குவாதம்

கூடலூர் அரசு கலைக் கல்லூரி கொரோனா சிகிச்சை மையத்தில், நோயாளிகள் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா தாக்கம் பரவலாக உள்ளது. அப்பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கூடலூர் அரசு கலைக்கல்லூரியில், சுமார் 235 படுக்கைகள் உள்ளன. இங்கு கொரோனா நோயாளிகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள் உள்ளன.

இந்தலையில், இன்று அரசு கலைக்கல்லூரியில் உள்ள நோயாளிகள், அங்கு தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக, அங்கு ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அரசு கலைக்கல்லூரியில் இருக்கக்கூடிய நோயாளிகள் தங்களுக்கு தரமற்ற உணவு வழங்குவதாகவும், இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் கூறியும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறினர்.

ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம், தரமற்ற உணவு குறித்து புகார் செய்து நோயாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Updated On: 12 Jun 2021 4:06 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...