/* */

உதகை அருகே வனப்பகுதியில் யானை பலி

முதுமலை புலிகள் காப்பகம் சீகூர் வனப்பகுதியில் அமைந்துள்ள ஆற்றோரத்தில் பெண் யானை மரணமடைந்தது தொடர்பாக வனத்துறை விசாரணை.

HIGHLIGHTS

உதகை அருகே வனப்பகுதியில் யானை பலி
X

வனப்பகுதியில் பலியான பெண் யானை.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம், வெளி மண்டல வனப்பகுதியான சீகூர் வனபகுதிக்குட்பட்ட குண்டட்டி ஆற்றுப்படுகையில், வனத்துறையின் வேட்டை தடுப்பு காவலர்கள், ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆற்றோரத்தில் பத்து வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பதைப் பார்த்த வேட்டை தடுப்பு காவலர்கள் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அடிப்படையில் யானை இறந்த இடத்திற்கு சென்ற வனத்துறை உயர் அதிகாரிகள், யானை உயிரிழப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யானை எதனால் இறந்தது என்பது குறித்து கண்டறிய, கால்நடை மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்ய வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர் .

Updated On: 15 Sep 2021 5:01 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?