/* */

அட்டகாசம் செய்யும் புலியை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு

கூடலூர் அருகே கிராமத்தில் அட்டகாசம் செய்யும் புலியை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் கூண்டு வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

அட்டகாசம் செய்யும் புலியை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு
X

வனத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள கூண்டு.

கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை ஊராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக கால்நடைகளை தாக்கி கொண்டு வரும் புலியால் மக்கள் மிகுந்த பீதி அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் சேமுண்டி எனும் பகுதியில் புலி தாக்கி பசு பலியானது. இதையடுத்து அக்கிராம மக்கள் இறந்த பசு உடலுடன் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மேலும் புலியை கூண்டு வைத்து பிடிக்கும் வரை போராட்டம் நடத்தப் போவதாக கூறி மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புலியை பிடிக்க கூண்டு வைப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து இன்று சேமுண்டி பகுதியில் வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டது.

Updated On: 23 Sep 2021 11:48 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?