/* */

தென்மேற்கு பருவமழை வருகிற 31-ந் தேதியே தொடங்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை வருகிற 31-ந் தேதியே தொடங்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
X

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருகிற 31ம் தேதி துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது.அந்தமான் கடலில் ஏற்பட்ட மாற்றமும், அங்கிருந்து வீசும் காற்றின் தன்மையும் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வழக்கமாக கேரளாவைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந் தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்கும்.தமிழகத்திற்கு தென்மேற்கு பருவ மழை காலத்தில்தான் அதிக அளவு மழை பொழிவு கிடைக்கும். ஜூன் மாதம் தொடங்கும் மழை செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.

அந்தமான் கடல் பகுதியில் ஏற்படும் வானிலை மாற்றத்தை கணக்கிட்டும், அங்கிருந்து வீசும் காற்றின் தன்மையை கொண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதை வானிலை ஆய்வு மையம் கணிக்கும்.

இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவ மழை ஜூன் 1-ந் தேதி தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியிருந்தது. ஆனால் இப்போது அந்தமான் கடலில் ஏற்பட்ட மாற்றமும், அங்கிருந்து வீசும் காற்றின் தன்மையும் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி வருகிற 31-ந் தேதியே தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என்று கூறப்பட்டு உள்ளது.தென்மேற்கு பருவ மழை காலத்தில் குமரி மாவட்டத்திலும் நல்ல மழை பொழிவு இருக்கும்.இங்குள்ள அனைத்து அணைகளும் தென்மேற்கு பருவ மழை காலத்தில் நிரம்பி வழியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 28 May 2021 4:49 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  2. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  3. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  4. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  5. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  6. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  7. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
  8. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா
  10. கிணத்துக்கடவு
    குடிபோதையில் தகராறு செய்த மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தை கைது