/* */

திருச்செங்கோட்டில் இளம்பெண்ணை கடத்திய டிரைவர் போக்சோவில் கைது

திருச்செங்கோட்டில் இளம்பெண்ணை கடத்திய டிரைவர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

HIGHLIGHTS

திருச்செங்கோட்டில் இளம்பெண்ணை  கடத்திய டிரைவர் போக்சோவில் கைது
X

நாமக்கல்லை அடுத்துள்ள பொட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் குமார் (36). மினி வேன் டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில், திருச்செங்கோடு கோழிக்கால்நத்தம் பகுதியை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும், 16 வயது மாணவியின் குடும்பத்தினருக்கும் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி, அந்த மாணவியிடம் பழகிய குமார், அவருக்கு திருமண ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டார்.

இது குறித்து மாணவியின் பெற்றோர் திருச்செங் கோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதன் பேரில் இன்ஸ் பெக்டர் ஹேமாவதி விசாரணை நடத்தி, நாமக்கல்லில் இருந்த குமாரை கைது செய்தனர். மாணவியை மீட்டு தாயாருடன் அனுப்பி வைத்தனர். இளம் வயது மாணவியை கடத்தியதாக குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு அவர் ரிமாண்ட் காவலில் ராசிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 18 Jun 2021 6:15 AM GMT

Related News