/* */

கொல்லிமலையில் வாகன சோதனையின்போது, டூ வீலர் மோதி போலீஸ் ஏட்டு படுகாயம்

Road Bike Accident -கொல்லிமலை அடிவாரத்தில் வாகன சோதனையின்போது, டூ வீலர் மோதியதில் போலீஸ் ஏட்டு படுகாயம் அடைந்தார். டூ-வீலரை ஓட்டி வந்த சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

கொல்லிமலையில் வாகன சோதனையின்போது, டூ வீலர் மோதி போலீஸ் ஏட்டு படுகாயம்
X

பைல் படம்.

Road Bike Accident - நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள காரவள்ளி பகுதியில் சேந்தமங்கலம் போலீஸ் எஸ்ஐ சீனிவாசன், ஏட்டுகள் ஆறுமுகம், ரமேஷ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு டூ வீலரில் 4 வாலிபர்கள் வேகமாக வந்தனர். அவர்களை போலீசார் நிறுத்த முயன்றனர். அப்போது அந்த டூ-வீலர் ஏட்டு ஆறுமுகம் மீது மோதியது. ஆனால் வாலிபர்கள் டூ வீலரை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பி சென்றனர். டூ- வீலர் மோதியதில் ஏட்டு ஆறுமுகம் பலத்த காயம் அடைந்தார். அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்ததில், ஆறுமுகம் மீது மோதிய டூ- வீலர் நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடி கூச்சிக்கல் புதூரை சேர்ந்த 17 வயது சிறுவன் ஓட்டி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அந்த சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Jun 2022 10:43 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  3. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  6. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  7. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  8. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  9. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  10. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...