கொல்லிமலையில் வாகன சோதனையின்போது, டூ வீலர் மோதி போலீஸ் ஏட்டு படுகாயம்
Road Bike Accident -கொல்லிமலை அடிவாரத்தில் வாகன சோதனையின்போது, டூ வீலர் மோதியதில் போலீஸ் ஏட்டு படுகாயம் அடைந்தார். டூ-வீலரை ஓட்டி வந்த சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
HIGHLIGHTS
Road Bike Accident - நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள காரவள்ளி பகுதியில் சேந்தமங்கலம் போலீஸ் எஸ்ஐ சீனிவாசன், ஏட்டுகள் ஆறுமுகம், ரமேஷ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு டூ வீலரில் 4 வாலிபர்கள் வேகமாக வந்தனர். அவர்களை போலீசார் நிறுத்த முயன்றனர். அப்போது அந்த டூ-வீலர் ஏட்டு ஆறுமுகம் மீது மோதியது. ஆனால் வாலிபர்கள் டூ வீலரை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பி சென்றனர். டூ- வீலர் மோதியதில் ஏட்டு ஆறுமுகம் பலத்த காயம் அடைந்தார். அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்ததில், ஆறுமுகம் மீது மோதிய டூ- வீலர் நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடி கூச்சிக்கல் புதூரை சேர்ந்த 17 வயது சிறுவன் ஓட்டி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அந்த சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2