/* */

முன்னாள் எம்.பியின் பேரன் கத்தியால் குத்திக்கொலை: போலீஸ் விசாரனை

சேந்தமங்கலம் அருகே முன்னாள் எம்.பி.,யின் பேரன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

முன்னாள் எம்.பியின் பேரன் கத்தியால் குத்திக்கொலை: போலீஸ் விசாரனை
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள பேளுக்குறிச்சி கல்லிட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). விவசாயி. இவர் முன்னாள் எம்.பி ஜி.பி சோமசுந்தரத்தின் பேரன். இவரது தோட்டத்தில் உள்ள வீட்டில் மனைவி சுகுணாவுடன் வசித்து வந்தார். அவர்களுக்கு மகன், ஒரு மகள், திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். அவர்களது மகள் காதல் திருமணம் செய்து கொண்டு கணவர் நவீனுடன் சேலம் மாவட்டம் ஆத்தூரில் வசித்து வருகிறார். இதனிடையே ராஜேந்திரனின் மருமகன் நவீன், மாமனார் சொத்தில் தனக்கும் பங்கு தரவேண்டும் என்று கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேந்திரன் தனக்கு சொந்தமான நிலத்தை பேளுக்குறிச்சியை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்தார். இதனால் அவருக்கும் அவரது உறவினர்கள் சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ராஜேந்திரன், தனது மனைவி சுகுணாவுடன் வீட்டில் படுத்த தூங்கிக் கொண்டிருந்தார். சுமார் 11 மணி அளவில் வீட்டுக்குள் மர்ம நபர்கள் சிலர் புகுந்துள்ளனர். சத்தம் கேட்டு கணவன், மனைவி இருவரும் திடுக்கிட்டு எழுந்தபோது, திடீரென மர்ம நபர்கள் சுகுணாவை தாக்கினர். ராஜேந்திரன் அவர்களை தடுக்க முயன்றார்.

அப்போது அவர்கள் சுகுணாவின் கண் முன்பே ராஜேந்திரனை சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். தகவல் கிடைத்ததும், பேளுக்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மாவட்ட போலீஸ் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரனை நடத்தினார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். ராஜேந்திரன் நிலத்தை விற்பனை செய்ததில் ஏற்பட்ட சொத்து தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 14 Sep 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  3. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  4. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  5. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  6. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  7. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  8. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  9. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  10. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...