Begin typing your search above and press return to search.
எருமப்பட்டி பகுதியில் நாளை மறுநாள் மின்சாரத்தடை அறிவிப்பு
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பகுதியில் நாளை மறுநாள் மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
எருமப்பட்டி பகுதியில் நாளை மறுநாள் மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் மின்வாரியம் கோட்டப்பொறியாளர் சபநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி துணை மின் நிலையத்தில், நாளை மறுநாள் 17ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை மறுநாள் 17ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும். இதையொட்டி, எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டான்செட்டி, வரதராஜபுரம், சிங்களங்கோம்பை, காவக்காரப்பட்டி, பவித்திரம்புதூர், செல்லிபாளையம், கஸ்தூரிப்பட்டி, புதுக்கோட்டை, கோனங்கிப்பட்டி, காளிசெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.