Begin typing your search above and press return to search.
சேந்தமங்கலம் அரசு கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட விழா
சேந்தமங்கலம் அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட விழா நடைபெற்றது.
HIGHLIGHTS
சேந்தமங்கலம் அருகே, வெட்டுக்காட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் வெங்கடேசன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திலீப் வரவேற்றார். நிகழ்ச்சியில் கல்லூரியின் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட துணை அலுவலர் பிரபு நன்றி கூறினார்.