/* */

கொல்லிமலை கேஜிபிவி மையத்தில் மாணவியர் சேர்க்கை: சி.இ.ஓ. தகவல்

கொல்லிமலை கேஜிபிவி மையத்தில் பெண் குழந்தைகள் சேர்க்கை துவக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தெரிவித்தார்.

HIGHLIGHTS

கொல்லிமலை கேஜிபிவி மையத்தில் மாணவியர் சேர்க்கை: சி.இ.ஓ. தகவல்
X

பைல் படம்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியத்தில், ஆதரவற்ற பெண் குழந்தைகள் மற்றும் கல்வி கற்க இயலாத சூழலில் உள்ள பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்காக, கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா (கேஜிபிவி) 3 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் சேரும் மாணவியருக்கு, ஹாஸ்டல், தனித்தனிக்கட்டில், மின்சார வசதி, நோட்டு புத்தகம், மருத்துவ வசதி, மாலை நேரத்தில் தையல் பயிற்சி, கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்படுகிறது.

பொதுமக்கள், தங்கள் பகுதியில், நான்காம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் அல்லது பள்ளி படிப்பை இடைநின்ற ஆதரவற்ற பெண் குழந்தைகள், ஏழ்மை சூழலில் உள்ள பெண் குழந்தைகள் இருந்தால், அவர்களை இந்த கையத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 98943 56853 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Updated On: 12 Aug 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்