/* */

சேந்தமங்கலம் பெருமாள் கோயிலில் 8,108 மகா சகஸ்ர தீப அலங்கார விழா

Senthamangalam Temple-நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பெருமாள் கோயிலில் 8,108 மகா சகஸ்ர தீப அலங்கார விழா 12ம் தேதி நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

சேந்தமங்கலம் பெருமாள் கோயிலில்  8,108 மகா சகஸ்ர தீப அலங்கார விழா
X

நாமக்கல் பெருமாள் கோவிலின் ராஜகோபுரம் (கோப்பு படம்)

Senthamangalam Temple-கருட பஞ்சமி விழாவை முன்னிட்டு 12ம் தேதி சேந்தமங்கலம் லட்சுமி நாராயணப்பெருமாள் கோவிலில் 8,108 மகா சகஸ்ர தீப அலங்கார விழா நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில், பிரசித்திபெற்ற அருள்மிகு லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ கருட பஞ்சமி விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கருட பஞ்சமியை முன்னிட்டு வருகிற 12ம் தேதி 8,108 மகா சகஸ்ர தீப அலங்கார பூஜை நடைபெறுகிறது. வியாழக்கிழமை காலை 8 மணிக்கு திருக்கடிகை பஜனை குழு வழங்கும் 4000 திவ்ய பிரபந்தம் நிகழ்ச்சி நடைபெறும். 10 மணிக்கு லட்சுமி நாராயணப் பெருமாள், கருடாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மதியம் 12 மணிக்கு அன்னதானம் வழங்கபடும். மாலை 5 மணிக்கு வசந்த மண்டபத்தில் நம்பெருமாள் பல அவதாரங் களில் திவ்ய தம்பதிகளாக காட்சி அளித்து சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

மாலை 5.30 மணிக்கு கோயில் வளாகத்தில் கருடாத்ரி பக்த குழுவின் சார்பில், 13ம் ஆண்டாக கோயில் வளாகத்தில் 8108 மகா சகஸ்ர தீப விளக்குகள் ஏற்றப்பட்டு மகா தீபாராதனை பூஜை நடைபெறும். மாலை 6.30 மணிக்கு கண்ணனின் கீதங்கள் என்ற தலைப்பில் இன்னிசை நடனம் நடைபெறும். இரவு 7 மணிக்கு நம்பெருமாள் திருக்கோயிலின் உட்பிரகாரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இரவு 8 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா மற்றும் லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில் ஸ்ரீ கருடாத்ரி பக்த குழுவினர் செய்துள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 18 March 2024 10:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  2. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  4. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  5. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  8. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  9. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  10. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு