/* */

கொல்லிமலையில் கேட்பாரற்றுக் கிடந்த 3 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

கொல்லிமலை ஆரியூர்நாடு, பஞ்சாயத்து அலுவலகம் அருகில் கேட்பாரற்றுக் கிடந்த 3 நாட்டுத் துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

கொல்லிமலையில் கேட்பாரற்றுக் கிடந்த 3 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருப்போர் அவற்றை தாமாக முன்வந்து போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இதையொட்டி மலைவாழ் மக்கள் பலரும் தங்களிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்தனர். இந்த நிலையில் ஆரியூர்நாடு பஞ்சாயத்து அலுவலகம் அருகில் 3 லைசென்ஸ் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகள் கேட்பாரற்றுக் கிடந்தன.

அவைகளை யார் அங்கு கொண்டு வந்து போட்டார்கள் என்பது தெரியவில்லை. பஞ்சாயத்து தலைவர் நாகலிங்கம், அந்த துப்பாக்கிகளை எடுத்துச் சென்று செம்மேட்டில் உள்ள வாழவந்திநாடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் துப்பாக்கிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 Sep 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்