Begin typing your search above and press return to search.
ஜல்லிக்கட்டுக்கு பூமி பூஜை
எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு இன்று முகூர்த்த கால் நடப்பட்டது.
HIGHLIGHTS
சேந்தமங்கலம் அடுத்துள்ள எருமப்பட்டியில் வருகின்ற 30-ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு இன்று எருமப்பட்டியில் விழாக்குழு சார்பில் முகூர்த்த கால் நடப்பட்டது.
தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள எருமப்பட்டியில் வருகின்ற 30-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. இதனையடுத்து விழாக்குழு சார்பில் இன்று எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் இடத்தை சுத்தம் செய்து பூமி பூஜை செய்தும் காளை கன்றுக்கு பூஜை செய்தும் முகூர்த்த கால் நடப்பட்டது. இதில் எருமப்பட்டி ஊர்மக்கள் மற்றும் விழாக்குழுவினர் கலந்து கொண்டு முகூர்த்த கால் நட்டனர்.