/* */

மாநில அளவிலான என்சிசி முகாம்: இராசிபுரம் அரசு கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம்

மாநில அளவிலான என்சிசி முகாமில் இராசிபுரம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.

HIGHLIGHTS

மாநில அளவிலான என்சிசி முகாம்: இராசிபுரம் அரசு கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம்
X

மாநில அளவிலான என்சிசி முகாமில் சிறப்பிடம் பெற்ற இராசிபுரம், திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி மாணவர்களை கல்லூரி முதல்வர் மணிமேகலை பாராட்டி பரிசு வழங்கினார்.

மாநில அளவிலான என்சிசி பட்டாலியன் மாணவர் படை வருடாந்திர முகாம், பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. கமாண்டிங் ஆபீசர் அனில் வர்மா முகாமிற்கு தலைமை வகித்தார்.

முகாமில், இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி என்சிசி மாணவ, மாணவியர் மற்றும் பல்வேறு கல்லூரிகளில் இருந்து என்சிசி மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.

இதில், இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லூரி இரண்டாம் ஆண்டு இயற்பியல் துறை மாணவர் யோகேஸ்வரன், மற்றும் மாணவி சுகுணா ஆகியோர் சிறந்த என்சிசி பயிற்சி மாணவர்களாக தேர்வு செய்யபட்டனர்.

மேலும், இரண்டாமாண்டு அரசியல் அறிவியல் துறை மாணவி யாழினி துப்பாக்கி சுடும் பயிற்சியில் இரண்டாம் இடம் பெற்று பதக்கங்களை பெற்றார். என்சிசி முகாமில் சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவிகளை கல்லூரி முதல்வர் மணிமேகலை பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

Updated On: 28 Nov 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்