/* */

ராசிபுரம் அருகே வனக்குழு உறுப்பினர்களுக்கு சுழல் நிதி கடனுதவி: எம்.பி., வழங்கல்

ராசிபுரம் அருகே வனக்குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு சுழல் நிதி கடன் உதவி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

ராசிபுரம் அருகே வனக்குழு உறுப்பினர்களுக்கு சுழல் நிதி கடனுதவி: எம்.பி., வழங்கல்
X

இராசிபுரம் தாலுக்கா குருவாளா கிராமத்தில், வனக்குழு பெண்களுக்கு சுழல் நிதியை, எம்.பி ராஜேஷ்குமார், எம்எல்ஏ பொன்னுசாமி ஆகியோர் வழங்கினார்கள்.

ராசிபுரம் தாலுக்கா, நாமகிரிப்பேட்டை ஒன்றியம், குருவாளா கிராமத்தில், கிராம வனக்குழு பெண்களுக்கு சுழல் நிதி கடனுதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தலைமை வகித்தார்.

ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கிராம வனக் குழுவினருக்கு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார். மொத்தம் 69 பெண்களுக்கு தலா ரூ. 15 ஆயிரம் வீதம், ரூ. 10 லட்சத்து 35 ஆயிரம் சுழல் நிதி கடனுதவி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ராசிபுரம் வனக்காப்பாளர் ரவிச்சந்திரன், முன்னாள் எம்.பி. சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 22 May 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கோடைகால பயிற்சி முகாம்
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மத்திய சிறை அருகே கைதிகள் நடத்த போகும் பெட்ரோல் பங்க்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற என் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி
  5. கவுண்டம்பாளையம்
    கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  7. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...
  8. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  9. இந்தியா
    விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல்
  10. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு