/* */

கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்ட 10 டன் ரேசன் அரிசி பறிமுதல்

வெண்ணந்தூர் அருகே கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்ட 10 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்ட 10 டன் ரேசன் அரிசி பறிமுதல்
X

இராசிபுரம் தாலுக்கா, வெண்ணந்தூர் அருகே கல்லாங்காட்டனூர், ஓலப்பட்டியில் கோழிப்பண்ணை ஒன்றில் ரேஷன்அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் எஸ்ஐ அகிலன் மற்றும் போலீசார், அந்த கோழிப்பண்ணையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோழித்தீவனம் அரைப்பதற்காக, ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர்.

அங்கு 200 மூட்டைகளில் இருந்த சுமார் 10 டன் ரேஷன்அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், அந்த கோழிப்பண்ணையின் உரிமையாளர் மனோபாரதி என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 4 May 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் என் கல்லூரி கனவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
  10. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை