/* */

ராசிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம்: அமைச்சர் ஆய்வு

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில், ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

ராசிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு  புதிய கட்டிடம்: அமைச்சர் ஆய்வு
X

ராசிபுரம் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, புதிய கட்டிடம் கட்டுவதற்காக இடத்தை, அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராசிபுரம் நகர ஆரம்ப சுகாதார நிலையம், தற்போது தாசா தெருவில் செயல்பட்டு வருகின்றது. இங்கு புற நோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, கர்ப்பிணி தாய்மார்களுக்கான பிரிவு, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பிரிவு ஆகியன செயல்பட்டுவருகின்றன. மேலும் கொரோனா பரிசோதனைகளும், கொரோனா நோய்த்தொற்று தடுப்பூசி போடும் பணிகளும் இங்கு நடைபெறுகின்றன.

தினசரி அதிகமான பொதுமக்கள் இங்கு வந்து செல்வதால், இடம் நெருக்கடி ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் வசதிக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ராசிபுரம் அண்ணா காலனி, வார்டு எண்.8ல் அமைந்துள்ள ஹவுசிங் போர்டு காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இடங்களை சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில், நன்கொடையாளர் ராஜேஸ்குமார், ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 6 July 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!