/* */

ராசிபுரம்: ஆக்கிரமிப்பை மீட்கக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

ராசிபுரம் அருகேயுள்ள ஆர்.புதுப்பட்டி பகுதியில், தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலத்தை மீட்கக்கோரி விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

HIGHLIGHTS

ராசிபுரம்: ஆக்கிரமிப்பை மீட்கக்கோரி  வட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
X

ராசிபுரம் தாலுக்கா புதுப்பட்டி அருகேயுள்ள ஈச்சப்பாறை பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தை ஒட்டி நீரோடை உள்ளது. மேலும், மேலும், விவசாயத் தோட்டத்தையொட்டி நீண்டகாலமாக பாதை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பாதை மற்றும் நீரோடையை மறித்து, தனியார் தரப்பில் வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்தது.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் வருவாய்த்துறை, காவல் துறையிடம் புகார் மனு அளிதனர். இதையொட்டி, ராசிபுரம் வட்டாட்சியர் நேரில் சென்று விசாரணை நடத்தி, ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார். அதன்பிறகும், ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால், நேரில் சென்ற போலீசார் மற்றும் அதிககாரிகள், சம்மந்தப்பட்ட நபர் வீட்டில் இல்லாததால் திரும்பி வந்துவிட்டனர்.

இதனால் ஆவேசமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என அவர்கள் வட்டாட்சியரிடம் வலியுறுத்தினர். இதுகுறித்து ஒரு சில நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதியளித்ததன் பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Updated On: 23 Jun 2021 6:51 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?