/* */

இராசிபுரம் அருகே கோயில் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியல்

இராசிபுரம் அருகே, கோயில் சிலையை உடைத்தவர்களைக் கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

இராசிபுரம் அருகே கோயில் சிலை   உடைக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியல்
X

இராசிபுரம் அருகே சீராப்பள்ளியில் கோயில் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டடனர்.

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்துள்ள சீராப்பள்ளி கிராமத்தில், ஒரு சமூகத்தினருக்கு சொந்தமான அய்யனார் கோயில் உள்ளது. பல ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் இக்கோயிலில் வழிபாடு நடத்தி வந்தனர். சம்பவத்தன்று அதிகாலை மர்ம நபர்கள், கோயிலில் இருந்த ஒரு சாமி சிலையை இடித்ததாக தெரிகிறது.

இதைக் கண்டித்தும், சாமி சிலையை இடித்த மர்ம நபர்களை கைது செய்யக்கோரியும், சீராப்பள்ளி பகுதியில் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இராசிபுரம் - ஆத்தூர் மெயின் ரோட்டை மறித்து, 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாமகிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதை ஏற்காத பொதுமக்கள், சாமி சிலையை இடித்தவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி, மறியலை தொடர்ந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, ஆயுதப்படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிதகாரிகள் மீண்டும் சமரசம் பேசி, கோவில் சிலையை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதை ஏற்று, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Updated On: 22 Sep 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?
  2. ஈரோடு
    ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர்,...
  3. வீடியோ
    தலைக்கேறிய கஞ்சா போதை வாகன ஓட்டி மீது தாக்குதல் !#drugaddiction...
  4. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்
  5. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  6. காஞ்சிபுரம்
    ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன்...
  7. குமாரபாளையம்
    மாவட்ட நீதிபதியை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்க கண்டன ஆர்ப்பாட்டம்
  8. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  9. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  10. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...