/* */

ராசிபுரத்தில் வரும் ஏப்.1ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

ராசிபுரம் நகரில் வருகிற ஏப்.1ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

ராசிபுரத்தில் வரும் ஏப்.1ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
X

பைல் படம்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, நாமக்கல் மாவட்ட தீனதயாள் உபாத்யாய ஊரகத் திறன் பயிற்சி திட்டத்தின் கீழ், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற ஏப்.1 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரியில் 1ம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை நடைபெறும். இந்த முகாமில் படித்து வேலைவாய்ப்பற்ற இரு பாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தோர் பங்கேற்று தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

முகாமில் பங்கேற்கும் தொழில் நிறுவனங்கள் மார்ச் 30ம் தேதி மாலை 5 மணிக்குள், தங்களது நிறுவன பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 04286-281131 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்துள்ளார்.

Updated On: 24 March 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  2. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  4. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  5. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  6. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  7. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  8. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  9. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  10. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு