/* */

இராசிபுரம் அருகே லாரி மோதி டூ வீலரில் சென்ற சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு

இராசிபுரம் அருகே லாரி மோதிய விபத்தில், டூ வீலரில் சென்ற சகோதரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

இராசிபுரம் அருகே லாரி மோதி டூ வீலரில்  சென்ற சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு
X

பைல் படம்

இராசிபுரம் அருகேயுள்ள தெற்குப்பட்டி, சந்திரசேகரபுரம் கிராமத்தைசச் சேர்ந்தவகள் ராமசாமி (38), ரங்கநாதன் (34), சகோதரர்கள். இருவரும் பெயின்ட் அடிக்கும் தொழிலாளர்கள்.

சம்பவத்தன்று நாமக்கல்லில் உள்ள கார் கம்பெனி ஒன்றில் பெயிண்டிங் வேலைக்காக, இருவரும் ஒரே டூ வீலரில் நாமக்கல் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில், அணைப்பாளையம் அருகே அவர்கள் சென்றபோது, கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் இருந்து பூச்சி மருந்து லோடு ஏற்றிச்சென்ற லாரி ஒன்று டூ வீலர் மீது மோதியது.

டூ வீலர் ரோடு ஓரம் இருந்து பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் சகோதரர்கள் ராமசாமி, ரங்கநாதன் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 29 Aug 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்