/* */

பரமத்திவேலூர் அருகே டூ வீலர் மோதி நடந்து சென்ற தொழிலாளி பலி

பரமத்தி வேலூர் அருகே டூ வீலர் மோதியதால் நடந்து சென்ற தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

HIGHLIGHTS

பரமத்திவேலூர் அருகே டூ வீலர் மோதி நடந்து சென்ற தொழிலாளி பலி
X

பைல் படம்.

பரமத்தி வேலூர் அருகே உள்ள ஓலப்பாளையம், இந்திராநகர் காலனியைச் சேர்ந்தவர் வீரன்(50). கூலித்தொழிலாளி. இவர் செங்கப்பள்ளி சென்று விட்டு இந்திரா நகர் காலனிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

எல்லைமேடு அருகே சென்று கொண்டிருந்த போது, அவருக்குப் பின்னால் வந்த டூ வீலர் வீரன் மீது மோதியது. இந்த விபத்தில், கீழே விழுந்து தலையில் பலத்த காயம்பட்டு உயிருக்கு போராடிய அவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீரன் உயிரிழந்தார். இது குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 Nov 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  2. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  6. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  7. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  9. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  10. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!