/* */

பரமத்திவேலூரில் மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதப் போராட்டம்

Latest Disability News India - பரமத்தி வேலூர் பகுதி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர், பரமத்தி தாசில்தார் அலுவலகம் எதிரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பரமத்திவேலூரில் மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதப் போராட்டம்
X

பைல் படம்.

Latest Disability News India - நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, கூடுதல் கட்டிடத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக அறை தொலைவில் உள்ளதாகவும், அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும், முன்பு இயங்கிய இடத்திலேயே அறை எண் 6, 7, 8 தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகத்தை மாற்ற வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை வலியுறுத்தி, பரமத்தி வேலூர் பகுதி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர், பரமத்தி தாசில்தார் அலுவலகம் எதிரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர், சங்க செயலாளர் சதீஷ்குமார் பேராட்டத்திற்கு தலைமை வகித்தார்.

தகவல் அறிந்து அங்கு சென்ற, பரமத்திவேலூர் தாசில்தார் சிவக்குமார், டி/எஸ்பி ராஜாரணவீரன், இன்ஸ்பெக்டர் வீரம்மாள் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் சமாதானம் அடைந்த மாற்றுத்திறாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 23 Jun 2022 8:58 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  2. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  3. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  4. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  6. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  7. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  8. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து