/* */

பரமத்திவேலூர் அருகே சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி பலி

பரமத்திவேலூர் அருகே தொழிலாளி ஒருவர் சாக்கடையில் தவறி விழுந்து இறந்தார்.

HIGHLIGHTS

பரமத்திவேலூர் அருகே சாக்கடையில்  தவறி விழுந்து தொழிலாளி பலி
X

பரமத்திவேலூர் அருகே பொத்தனூரில் ரோட்டோரம் இருந்த, சாக்கடை கால்வாயில் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சாக்கடை கால்வாயில் விழுந்து இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு, ப.வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக பரமத்திவேலூர் போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் பாண்டமங்கலம் அருகே உள்ள கோப்பணம்பாளையம் தன்னாசிமேடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சேகர் (45) என்பது தெரியவந்தது. இவருடைய மனைவி இந்திராணி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டதாகவும், சேகர் மட்டும் தனது தாயார் அன்னபூரணியுடன் தனியாக வசித்து வந்ததும் தெரியவந்தது. கூலித்தொழிலாளி சேகர் சாக்கடை கால்வாயில் எப்படி தவறி விழுந்து இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 March 2022 6:52 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  4. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  5. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  6. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  7. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  8. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  10. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...