/* */

பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலை

பரமத்தி அருகே பெற்றோர் திட்டியதால் கொதிக்கும் எண்ணெயை உடலில் ஊற்றி கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலை
X

சித்தரிக்கப்பட்ட படம்

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள கோனூர் கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மனைவி சாந்தி. இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது மகள் காவியா (18). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் காவியா வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் பாடங்கள் படித்து வந்தார். கடந்த 12-ந் தேதி பெற்றோர் கூலி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினர்.

அப்போது காவியா சமையல் செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனோகரன், சாந்தி ஆகியோர் அவரை திட்டியதாக தெரிகிறது. இதில் காவியா மனவேதனை அடைந்தார். இந்தநிலையில் திடீரென அவர் வீட்டு சமையல் அறையில் ஸ்டவ்வில் இருந்த கொதிக்கும் எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டார். இதனால் ஏற்பட்ட வலியால் அலறிய அவரை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காவியா பரிதாபமாக இறந்தார். இது குறித்து பரமத்தி போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Updated On: 17 Jun 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்