/* */

பொத்தனூர் அருகே மர்மமான முறையில் இளைஞர் சாவு: போலீஸ் விசாரணை

பொத்தனூரில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

பொத்தனூர் அருகே மர்மமான முறையில் இளைஞர் சாவு: போலீஸ் விசாரணை
X

பைல் படம்.

பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர், தேவராய சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவரது வீட்டு முன் கார் நிறுத்துவது தொடர்பாக, மணிகண்டனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ், ரவி, குமார் ஆகியோருடன் ஏற்கனவே தகராறு இருந்து வந்தது.

சம்பவத்தன்று இரவு, அவருக்கும் ரமேஷ், ரவி, குமார் ஆகியோருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது மூவரும் சேர்ந்து மணிகண்டனை தாக்கிவிட்டு சென்றுவிட்டனர். அடுத்த நாள் காலை, நீண்ட நேரம் ஆகியும், மணிகண்டன் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து பார்த்த போது, தூக்கில் தொங்கிய நிலையில் மணிகண்டன் இறந்து கிடந்தார்.

அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தலைமறைவான ரமேஷ், ரவி, குமார் ஆகிய மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 16 Jan 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  2. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  4. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  5. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  6. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  7. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  8. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  10. ஈரோடு
    ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...