/* */

பரமத்தி வேலூர் அருகே கார் மோதியதால் டூ வீலரில் சென்றவர் உயிரிழப்பு

பரமத்தி வேலூர் அருகே கார் மோதியதால் டூ வீலரில் சென்றவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பரமத்தி வேலூர் அருகே கார் மோதியதால் டூ வீலரில் சென்றவர் உயிரிழப்பு
X

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் முருகேசன் (63). கூலித்தொழிலாளி. இவர் நேற்று நாமக்கல்லில் உள்ள ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக, உறவினர் விஜயகுமார் என்பவரது டூ வீலரின் பின்னால் அமர்ந்து சென்றார். பாண்டமங்கலம் அருகே உள்ள கோப்பணம்பாளையம் அருகே ரோட்டில் இருந்த வேகத்தடையில் செல்லும்போது, பின்னால் வந்த கார் ஒன்று டூ வீலர் மீது மோதியது. இதனால் டூ வீலரின் பின்னால் அமர்ந்திருந்த முருகேசன் கீழே விழுந்தார், அப்போது பின்னால் வந்த கார் அவர் மீது ஏறியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ப.வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு செல்லும்வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ப.வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 19 Jun 2022 4:12 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பிள்ளைக்கு நீங்கள் 'சூப்பர் ஹீரோ'வா?
  3. தேனி
    தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களே.. உங்களுக்கு ஒரு பணிவான...
  4. தேனி
    கைகளில் மருதாணி, மெகந்தி போட்டவர்களும் வாக்களிக்கலாம்!
  5. இந்தியா
    முதல்கட்ட தோ்தலில் களம் காணும் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள்,...
  6. கல்வி
    சுவாமி விவேகானந்தரிடமிருந்து மாணவர்களுக்கான அழியா ஞானம்
  7. திருச்சிராப்பள்ளி
    இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்! போராடி பெற்ற வாக்காளர்...
  8. இந்தியா
    மோடி ஆட்சியிலா சீனா, இந்தியாவை ஆக்கிரமித்தது..?
  9. இந்தியா
    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்! கர்நாடக...
  10. உலகம்
    உலகின் சிறந்த பாதுகாப்பு : அசத்தியது இஸ்ரேல்...!