/* */

பள்ளி மாணவியை கடத்திய கட்டட மேஸ்திரி போக்சோவில் கைது

திருமண ஆசை கூறி பள்ளி மாணவியை கடத்திய கட்டட மேஸ்திரி போக்சோவில் கைது

HIGHLIGHTS

பள்ளி மாணவியை கடத்திய கட்டட மேஸ்திரி போக்சோவில் கைது
X

பரமத்திவேலூர் தாலுக்கா, கந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கு செல்வதாக கூறிச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. மாணவியை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து பெற்றோர் தங்களது மகளை கண்டுபிடித்து தரக்கோரி நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் மாயமான மாணவியைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் போலீசாரின் விசாரணையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி மணிவாசகம் ( 25) என்பவர் கடந்தஒரு ஆண்டுக்கும் மேலாக கந்தம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து, கட்டிட வேலை செய்து வந்தார். அப்போது மணிவாசகத்துக்கும், பிளஸ்-2 மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவியிடம் திருமண ஆசைவார்த்தை கூறிய அவர் மாணவியை கடத்தி சென்று, திருப்பூரில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து நல்லூர் போலீசார் திருப்பூர் சென்று மாணவியை மீட்டனர். பள்ளி மாணவியை திருமண ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்ற மணிவாசகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மாணவி காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Updated On: 14 Dec 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  9. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!