/* */

பரமத்திவேலூரில் ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட 4 கடைகளுக்கு சீல்!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில், ஊரடங்கு விதிமுறைகளை மீறிகளை செயல்பட்டு வந்த 4 கடைகளை, அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

பரமத்திவேலூரில் ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட 4 கடைகளுக்கு சீல்!
X

பரமத்தி வேலூரில், ஊரடங்கு விதிமுறைகளை மீறி சில கடைகள் செயல்பட்டு வருவதாக போலீசார் மற்றும் டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு, தகவல் கிடைத்தது. இதையொட்டி ப.வேலூர் போலீஸ் டிஎஸ்.பி ராஜாரணவீரன் உத்தரவுப்படி, போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சுகாதார ஆய்வாளர் செல்வக்குமார் ஆகியோர் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது. ப.வேலூர் திருவள்ளூர் ரோட்டில், ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட 2 ஸ்டேஷனரி கடைகள், பழைய பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு பேட்டரி கடை மற்றும் அண்ணா சிலை அருகே உள்ள ஒரு பூட்டு சாவி சர்வீஸ் கடை ஆகிய 4 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அத்துடன், கடை ஒன்றுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

Updated On: 12 Jun 2021 11:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  2. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  5. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  6. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  7. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  8. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்