/* */

கந்தம்பாளையம் அருகே டிராக்டர் கிணற்றில் விழுந்ததால் விவசாயி உயிரிழப்பு

கந்தம்பாளையம் அருகே டிராக்டர் கிணற்றில் விழுந்ததால் விவசாயி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கந்தம்பாளையம் அருகே டிராக்டர் கிணற்றில்  விழுந்ததால் விவசாயி உயிரிழப்பு
X

நாமக்கல் மாவட்டம் ப.வேலூர் தாலுகா, கந்தம்பாளையம் அருகே அருணகிரி பாளையம், ஓடக்காடு புதூரைச் சேர்ந்தவர் சண்முகம் (61), விவசாயி. இவர், தனக்கு சொந்தமான நிலத்தில் டிராக்டர் மூலம் உழவு செய்து கொண்டிருந்தார். அந்த விவசாய நிலத்தில் கிணறு ஒன்று உள்ளது. கிணற்றின் ஓரம் உழவு செய்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தாறுமாறாக ஓடி கிணற்றுக்குள் பாய்ந்தது. இதனால் தலையில் அடிபட்ட சண்முகம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் கிடைத்ததும், அங்கு வந்த திருச்செங்கோடு நிலைய தீயணைப்பு அலுவலர் குணசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இருந்து சண்முகத்தின் உடலை மீட்டனர். பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் கிணற்றில் விழுந்த டிராக்டர் மீட்கப்பட்டது. இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 26 Jun 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'பாரபட்ஷம்' நியாயத்தை கொல்லும் கூர்வாள்..!
  2. மதுரை
    மதுரை வாக்குச்சாவடியில் காவி முண்டாசு கட்டிய தேர்தல் அலுவலர்!...
  3. லைஃப்ஸ்டைல்
    ஈருயிர் ஓருயிராக உருவெடுத்த கணவன்-மனைவி உறவு..!
  4. லைஃப்ஸ்டைல்
    ரமழான் ஒவ்வொரு இஸ்லாமியர்களின் இதயத்தை நிரப்பும் பண்டிகை..!
  5. சங்கரன்கோவில்
    சங்கரன்கோவில் அருகே தேர்தல் புறக்கணிப்பு! 1000 ஓட்டுகளில் 1௦ மட்டுமே...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘என்றாவது ஒரு நாள், நான் இல்லாமல் போவேன்’ - மனிதர்களுக்கு மரணம்...
  7. லைஃப்ஸ்டைல்
    எமை ஈன்றெடுத்த தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து..!
  8. சூலூர்
    104 வயதில் தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய முதியவர்
  9. லைஃப்ஸ்டைல்
    பாசத்துடன் பண்பினை புகட்டிய தாத்தா..!
  10. லைஃப்ஸ்டைல்
    ஈடு செய்ய இயலாத இழப்பின் கொடூரம் - மரணத்தின் வலிகள் குறித்த...