/* */

ப.வேலூரில் பூக்கள் விலை உயர்வு:1 கிலோ குண்டு மல்லி ரூ.2,300

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பரமத்திவேலூர் ஏல மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.2,300க்கு விற்பனையானது.

HIGHLIGHTS

ப.வேலூரில் பூக்கள் விலை உயர்வு:1 கிலோ குண்டு மல்லி ரூ.2,300
X

பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். தோட்டங்களில் விளையும் மலர்களை அவர்கள், தினசரி ப.வேலூரில் உள்ள ஏல மார்க்கெட்டில் கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனர்.

வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பூ வியாபாரிகள் மார்க்கெட்டிற்கு வந்து ஏலம் மூலம் மலர்களை கொள்முதல் செய்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், குண்டு மல்லி ஒரு கிலோ ரூ.1,000, சம்பங்கி கிலோ ரூ.50, அரளிப்பூ ரூ.150, ரோஜாப்பூ ரூ.150-க்கும், முல்லைப் பூ ரூ.1,00, செவ்வந்திப்பூ ரூ.100 என்ற விலையில் ஏலம் போனது.

தற்போது பொங்கல் பண்டிகை துவங்கியுள்ளதால், நேற்று நடைபெற்ற மலர்கள் ஏலத்தில் ஒரு கிலோ குண்டு மல்லி ரூ.2,300க்கும் ஏலம் போனது. சம்பங்கி கிலோ ரூ.120, அரளிப்பூ கிலோ ரூ.350, ரோஜாப்பூ கிலோ ரூ.250, முல்லைப்பூ ரூ.2,000ர, செவ்வந்திப்பூ ரூ.200 என்ற விலையில் ஏலம் போனது. பூக்கள் விலை உயர்வால் மலர் சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 13 Jan 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வெப்ப அலை; பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றம்; கலெக்டர் ஆய்வு
  3. பொன்னேரி
    குண்ணமஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர்; ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  7. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  8. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...
  10. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...