/* */

விவசாயிகள் ஆடு, மாடு, கோழி வளர்க்க 50 சதவீதம் மானிய உதவி

namakkal news, namakkal news today-சிறு விவசாயிகள், ஆடு, மாடு, கோழி வளர்க்க தமிழக அரசின் சார்பில், 50 சதவீதம் மானிய உதவி வழங்கப்படுகிறது.

HIGHLIGHTS

விவசாயிகள் ஆடு, மாடு, கோழி  வளர்க்க 50 சதவீதம் மானிய உதவி
X

namakkal news-சிறு விவசாயிகள், ஆடு, மாடு, கோழி வளர்க்க, 50 சதவீதம் மானிய உதவி வழங்கப்படுகிறது.(கோப்பு படம்)

namakkal news, namakkal news today- இது குறித்து, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பரமத்தி வட்டாரத்தில் தமிழக அரசின், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பரமத்தி அருகே உள்ள கூடச்சேரி, பிள்ளைகளத்தூர் உள்ளிட்ட மானாவாரி பகுதிகளில் தகுதி உள்ள விவசாயிகளுக்கு மானியத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஒருங்கிணைந்த பண்ணைய முறை மூலம் பயிர்கள் மற்றும் தீவன பயிர்கள் பயிரிடுவதுடன், கறவை மாடு, ஆடு அல்லது செம்மறி ஆடு மற்றும் கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மண்புழு உரம் உற்பத்தி மற்றும் பழச்செடிகள் ஆகியவற்றிற்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். ஒவ்வொரு அலகுக்கும் அதிகபட்சம் ரூ.30 ஆயிரம் மானியம் வழங்கப்படும். பொது விவசாயிகளுக்கு 1 எக்டேர் நிலம் இருக்கவேண்டும். ஆதி திராவிட விவசாயிகளுக்கு 1 ஏக்கர் நிலம் தேவை. மேலும் இத்திட்டம் தொடர்பான தகவல்களுக்கு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அல்லது உழவன் செயலியில் பதிவு செய்து பயன் அடையலாம் என, அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 12 Jun 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!