/* */

காவிரியில் வெள்ளம்: நிரம்பி வழியும் ஜேடர்பாளையம் தடுப்பணை

காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஜேடர்பாளையம் தடுப்பணை நிரம்பி வழிகிறது.

HIGHLIGHTS

காவிரியில் வெள்ளம்: நிரம்பி வழியும் ஜேடர்பாளையம் தடுப்பணை
X

காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால், ஜேடர்பாளையம் தடுப்பணையில், ராஜா வாய்க்கால் மதகுகளுக்கு மேல் தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுக்காவில், காவிரியின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இங்கிருந்து பாசனத்திற்காக ராஜாவாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால்கள் பிரிக்கப்பட்டு தண்ணீர் செல்கிறது. தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையாலும், மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும், ஜேடர்பாளையம் தடுப்பணைக்கு வினாடிக்கு சுமார் 60 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வருகிறது. இதனால் அணையின் முழு கொள்ளளவையும் தாண்டி தண்ணீர் பாய்ந்தோடுகிறது.

கூடுதல் தண்ணீர் வரத்தால், தடுப்பணையில் இருந்து பிரிந்து செல்லும் ராஜ வாய்க்கால் மதகின் மேற்பகுதிவரை, தண்ணீர் வழிந்து வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக பாய்ந்தோடுகிறது. இதனால் ராஜவாய்க்காலின் கிளை வாய்க்கால்களான கொமராபாளையம், பொய்யேரி, மோகனூர் உள்ளிட்ட பாசன வாய்க்கால்களில் தண்ணீர் தடையின்றி செல்கிறது. கடைமடைப் பகுதி வரை தண்ணீர் வேகமாக செல்வதால், வாய்க்கால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனார்.

காவிரியாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், அனிச்சம்பாளையத்தில் இருந்து, கரூர் மாவட்டம், புஞ்சை புகளூர் இடையே, தற்போது கட்டப்பட்டு வரும், புதிய தடுப்பணை பணிகளை விரைந்து முடித்தால், கூடுதலாக தண்ணீரை சேமிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் முடியும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 22 Nov 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்