/* */

பரமத்திவேலூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பரமத்திவேலூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி
X

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், சோழசிராமணி அருகே உள்ள பச்சாக்கவுண்டன்வலசு, காரைக்களம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் சுரேஷ் (18), கூலித்தொழிலாளி. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் மணிகண்டன் (30) என்பவரும் பச்சாக்கவுண்டன்வலசு பகுதியில் இருந்து திருச்செங்கோடு அருகே சித்தளந்தூருக்கு காரில் சென்றனர்.

அப்போது, ஒரு திருப்பத்தில் நிலை தடுமாறிய கார், சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சுரேஷ் படுகாயமடைந்தார். திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி சுரேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 15 Jun 2021 9:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  2. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  3. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  5. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  6. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
  7. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?
  9. சினிமா
    கில்லி படத்துல அது ஃபேக்காம்.. தரணியே சொல்லிட்டாரு..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர்,...