பெற்றோரே உஷார் - பபிள்கம் மிட்டாய் தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழப்பு
பரமத்திவேலூர் அருகே பபிள் கம் மிட்டாய் தொண்டையில் சிக்கியதால், இரண்டரை வயது குழந்தை பரிதாபமாக உயரிழந்தார்.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுக்கா, நாகதாசம்பட்டியைச் சேர்ந்தவர் இளவரசன் (26). இவர் தற்போது தனது மனைவி வைஷாலியுடன் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர். தண்ணீர் பந்தல்மேடு பகுதியில் தங்கி, ஒரு ஹோட்டலில் சமையல்காரராக வேலை செய்து வருகிறார். அவர்களுக்கு, உஷாரிகா என்ற இரண்டரை வயது மகள் இருந்தார்.
சம்பவத்தன்று, குழந்தை உஷாரிகா பபிள்கம் மிட்டாய் சாப்பிட்டுள்ளார். அப்போது அந்த மிட்டாய் உஷாரிகாவின் தொண்டையில் சிக்கியதால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைப் பார்த்த குழந்தையின் பெற்றோர், உடனடியாக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நாமக்கல் செல்லும் வழியில் குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பபிள் கம் மிட்டாய் போன்றவை பிஞ்சுக் குழந்தைகளுக்கு கொடுப்பதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.