/* */

பரமத்திவேலூரில் டேக்சி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கான ஆலோசனை கூட்டம்

பரமத்தி வேலூரில் போலீஸ் துறை சார்பில் டேக்சி. ஆட்டோ ஓட்டுநர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பரமத்தி வேலூரில், டேக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. போலீஸ் டிஎஸ்பி., ராஜாரணவீரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

அப்போது பேசிய டிஎஸ்பி., ராஜரணவீரன், பகல், இரவு நேரங்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால், டேக்சி மற்றும் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக 20 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் கார் மற்றும் ஆட்டோக்களில் பயணம்செய்தால் அவர்களை கண்காணிக்க வேண்டும்.

ஏதேனும் ஆயுதங்கள் வைத்திருந்தாலும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆட்கள் மற்றும் சிறுமிகளைக் கடத்தி வருவதாக தெரியவந்தாலும் தகவல் தெரிவிக்க வேண்டும். மது அருந்திவிட்டு கார், ஆட்டோக்களை ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என கூறினார்.

திரளான கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முடிவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் நன்றி கூறினார்.

Updated On: 27 Sep 2021 11:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?