/* */

மது வாங்க மனைவி பணம் தர மறுப்பு: விரக்தியில் கணவர் தற்கொலை

மோகனூர் அருகே மது வாங்க மனைவி பணம் கொடுக்காததால், விரக்தியடைந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

HIGHLIGHTS

மது வாங்க மனைவி பணம் தர மறுப்பு: விரக்தியில் கணவர் தற்கொலை
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள மணியங்காளிபட்டி புது காலனியை சேர்ந்தவர் முருகேசன் (52), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி விஜயலட்சுமி (50). முருகேசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அதனால் அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

சம்பவத்தன்று முருகேசன் தனது மனைவி விஜயலட்சுமியிடம், மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த முருகேசன் வீட்டை விட்டு வெளியே சென்று மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

பஸ் ஸ்டாப் அருகில் மயங்க்கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தார். இதுகுறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 28 May 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி