/* */

வேலகவுண்டம்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலி

வேலகவுண்டம்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர், பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

வேலகவுண்டம்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலி
X

கோப்பு படம் 

நாமக்கல் அருகே உள்ள போதுபட்டி காலனியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மகன் பிரகாஷ் (30), பெயிண்டிங் தொழிலாளி. இவர் கடந்த 16-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் வேலகவுண்டம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். நாமக்கல் - திருச்செங்கோடு மெயின் ரோட்டில் இளநகர் அருகே அவர் சென்றபோது, ரோட்டின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளை திடீரென திருப்பியுள்ளார். அப்போது நிலை தடுமாறி தவறி கீழே விழுந்த அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்துவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அஙகு சிகிச்சை பெற்றுவந்த பிரகாஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 22 Oct 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  2. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  3. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  5. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  6. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
  7. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?
  9. சினிமா
    கில்லி படத்துல அது ஃபேக்காம்.. தரணியே சொல்லிட்டாரு..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர்,...