வேலகவுண்டம்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலி
வேலகவுண்டம்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர், பரிதாபமாக உயிரிழந்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் அருகே உள்ள போதுபட்டி காலனியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மகன் பிரகாஷ் (30), பெயிண்டிங் தொழிலாளி. இவர் கடந்த 16-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் வேலகவுண்டம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். நாமக்கல் - திருச்செங்கோடு மெயின் ரோட்டில் இளநகர் அருகே அவர் சென்றபோது, ரோட்டின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளை திடீரென திருப்பியுள்ளார். அப்போது நிலை தடுமாறி தவறி கீழே விழுந்த அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்துவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அஙகு சிகிச்சை பெற்றுவந்த பிரகாஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.