/* */

நாமக்கல் அருகே ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய 2 பேர் கைது

நாமக்கல் அருகே ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய 2 பேர் கைது
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள பழையபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (20). இவர் அதே பகுதியில் பாஸ்ட்புட் ஹோட்டல் நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ஸ்ரீராம்(20), எலுவம்பட்டியைச் சேர்ந்த வீரன் சுந்தரலிங்கம் (20) ஆகிய இருவரும் கடைக்கு வந்து உணவு கேட்டுள்ளனர். பிரகாஷ் கடையை மூடவேண்டியிருப்பதால் உணவு முடிந்து விட்டது என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பிரகாசை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பிரகாஷ், சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சேந்தமங்கலம் எஸ்.ஐ சந்திரன் வழக்குப்பதிவு செய்து, ஸ்ரீராம், வீரன் சுந்தரலிங்கம் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Updated On: 17 Sep 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!