/* */

நாமக்கல்லில் வரும் 12ம் தேதி மீன் வளர்ப்பு குறித்து பயிற்சி

பருவகாலத்திற்கேற்ப மீன்வளர்ப்பு குறித்து இலவச பயிற்சிமுகாம், நாமக்கல்லில் வருகிற 12ம் தேதி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் வரும் 12ம் தேதி மீன் வளர்ப்பு குறித்து பயிற்சி
X

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள, வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 12ம் தேதி வியாழக் கிழமை காலை 10 மணிக்கு, பருவகாலத்திற்கேற்ற மீன் வளர்ப்பு தொழில்நுட்பம் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில், மீன்வளர்ப்பு பண்ணைக் குட்டைக்கு தேவையான இடம் மற்றும் நீர் தேர்வு செய்தல், பருவகால மாற்றத்திற்கேற்ப வெப்பநிலை தாங்கக்கூடிய மீன் குஞ்சுகள் தேர்வு செய்தல், நீர் மேலாண்மை, தீவன மேலாண்மை, மீன்கழிவுகளை மறுசுழற்ச்சி செய்து மீன்களுக்கு உணவாக பயன்படுத்துதல் மற்றும் மத்திய அரசின் மூலம் மீன் வளர்ப்புக்கான மானியம் பெறுதல் போன்றவை குறித்து விரிவாக கற்றுத்தரப்படும்.

பயிற்சியில், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள், 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 6 May 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!