Begin typing your search above and press return to search.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 45 பேருக்கு கொரோனா தொற்று
நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரு நாளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 பேர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், ப.வேலூர், சேந்தமங்கலம், காளப்பாநாய்க்கன்பட்டி, நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், வெப்படை, திருச்செங்கோடு, பெரியமணலி, மோகனூர், என்.கொசவம்பட்டி, கீரம்பூர், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதன் மூலம், மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 51,757 ஆக உயர்ந்துள்ளது. இன்று 54 பேர் சிகிச்சை குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 50,659 பேர் சிகிச்சை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மொத்தம் 604 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 494 ஆக உயர்ந்துள்ளது.