/* */

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்திய மரவள்ளிக் கிழங்கு விலை உயர்வு

நாமக்கல் மாவட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி  ஏற்படுத்திய மரவள்ளிக் கிழங்கு  விலை உயர்வு
X

நாமக்கல் மாவட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு டன்னுக்கு ரூ.1,000 விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், மோகனூர், பரமத்திவேலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளையும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், நாமகிரிப்பேட்டை, ஆத்தூர் பகுதிகளில் உள்ள ஜவ்வரிசி ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் சில வியாபாரிகள் மரவள்ளிக்கிழங்கை கொள்முதல் செய்கின்றனர்.

மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் அதில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிக்கிழங்கு ஒரு டன் ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது ஒரு டன்னுக்கு ரூ.1,000 உயர்ந்து ரூ.13 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. இதேபோல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளிக்கிழங்கு கடந்த வாரம் ரூ.17 ஆயிரத்துக்கு விலை போனது. தற்போது ரூ.18 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Updated On: 11 July 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  3. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  4. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  5. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  6. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  7. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  8. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது