/* */

நாமக்கல் நகராட்சி பகுதிகளில் ஜிகா வைரஸ் நோய் தடுப்பு தீவிரம்

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், ஜிகா வைரஸ் பரவலை தடுக்க, தீவிர சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் நகராட்சி பகுதிகளில் ஜிகா வைரஸ் நோய் தடுப்பு தீவிரம்
X

நாமக்கல் நடராஜபுரம் பகுதி வீடுகளில், தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்து தெளிக்கப்பட்டது.

இது குறித்து நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் ஜிகா வைரஸ் பரவலை தடுக்க, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வகையில் நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இவற்றில் நோய்த்தடுப்பு பணிகள் மேற்கொள்வதற்காக, 50 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொருவருக்கும் தலா 100 வீடுகள் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியாளர்கள் வார்டுகளுக்கு உட்பட்ட குடியிருப்புகளுக்கு சென்று தண்ணீர் தொட்டிகளில் ஏடிஎஸ் கொசுக்களை அழிக்க, அபேட் மருந்து தெளிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்களும் தங்களது குடியிருப்புகளில் பயன்படுத்தாத பொருட்களில் மழைநீர் தேங்கியிருப்பதை அகற்றி , சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், அபேட் மருந்து தெளிக்க வரும் பணியாளர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று, அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 14 July 2021 11:49 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்