/* */

உயர்த்தப்பட்ட தராசுகளுக்கான முத்திரை கட்டணம்: திரும்பப் பெற வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை

உயர்த்தப்பட்ட தராசுகளுக்கான முத்திரை கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தமிழக அரசுக்குவேண்டுகோள் விடுத்துள்ளது.

HIGHLIGHTS

உயர்த்தப்பட்ட தராசுகளுக்கான முத்திரை கட்டணம்: திரும்பப் பெற வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை
X

நாமக்கல் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஜெயகுமார் வெள்ளையன்.

இதுகுறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், நாமக்கல் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தல் கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன்பு, கடைகள் மற்றம் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும், அனைத்து வகையான தராசுகளுக்கும் முத்திரை கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டது. கொரோனா காலங்களில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி, வணிகர்களின் வாழ்வாதாரம் பரிதாப நிலைக்கு சென்று, தற்போது படிப்படியாக மீண்டுவருகிறது.

இந்த நிலையில், தமிழக அரசின், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை, சிறு வணிகர்கள் பயன்படுத்தும் எடை போடும் தராசுகளின் ஆண்டு முத்திரைக் கட்டணத்தை, 50 சதவீதம் உயர்த்தி உள்ளது. மேலும், முறையான பயன்பாட்டிற்கான அபராத கட்டணத்தையும் உயர்த்தி அறிவித்துள்ளது. அதில், குறிப்பாக, 30 கிலோ வரை எடை போடும் தராசுகளின் முத்திரை கட்டணத்தை, ரூ. 400ல் இருந்து, 600 ஆக உயர்த்தியுள்ளது. அதேபோல், ஒவ்வொரு எடை போடும் தராசுகளின் அளவுகளுக்கு ஏற்ப, அதன் மறு முத்திரைக் கட்டணம் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள நெருக்கடியான பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு, உயர்த்தப்பட்ட முத்திரை கட்டணம் மற்றும் அபராத கட்டண அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற்று, சிறு குறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 26 May 2023 9:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  5. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  6. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  9. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு