/* */

நாமக்கல்லில் குடிநீருடன் சாக்கடை கலப்பு: பொதுமக்கள் போராட்டம்

நாமக்கல் நகராட்சி 13வது வார்டு பகுதியில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருவதைக் கண்டித்து, பொதுமக்கள் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் குடிநீருடன் சாக்கடை கலப்பு: பொதுமக்கள் போராட்டம்
X

நாமக்கல் நகராட்சி 13வது வார்டு பகுதியில், குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதைக் கண்டித்து, திரளான பெண்கள் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

நாமக்கல் நகராட்சி 13-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நகரட்சி குடிநீர் இணைப்பில், குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் வீதியின் நடுவில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் அவர்களுன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சாக்கடை கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதால், அதில் தேங்கும் கழிவுநீர் குடிநீர் குழாயில் உள்ள உடைப்பு வழியாக புகுந்து விடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் சாக்கடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு போலீசார் நகராட்சி அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Updated On: 22 May 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...