Begin typing your search above and press return to search.
புதுச்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு
புதுச்சத்திரம் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டார்.
HIGHLIGHTS
புதுச்சத்திரம் அருகே உள்ள குள்ளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பாவாயி (85). சம்பவத்தன்று காலை நடந்து சென்ற பாவாயி, அங்குள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தார்.
சுமார் 80 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில், 20 அடிவரை தண்ணீர் இருந்தது. பாவாயிக்கு நீச்சல் தெரிந்த போதிலும், அவரால் மேலே ஏறி வர முடியவில்லை. கிணற்றுக்குள் இருந்து அவர் தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டார். இதைக்கேட்ட அருகில் இருந்தவர்கள் ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
ராசிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர், கிணற்றுக்குள் இறங்கி கயிறு மூலம், உயிருடன் பாவாயியை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.