/* */

புதுச்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு

புதுச்சத்திரம் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டார்.

HIGHLIGHTS

புதுச்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு
X

புதுச்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்.

புதுச்சத்திரம் அருகே உள்ள குள்ளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பாவாயி (85). சம்பவத்தன்று காலை நடந்து சென்ற பாவாயி, அங்குள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தார்.

சுமார் 80 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில், 20 அடிவரை தண்ணீர் இருந்தது. பாவாயிக்கு நீச்சல் தெரிந்த போதிலும், அவரால் மேலே ஏறி வர முடியவில்லை. கிணற்றுக்குள் இருந்து அவர் தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டார். இதைக்கேட்ட அருகில் இருந்தவர்கள் ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

ராசிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர், கிணற்றுக்குள் இறங்கி கயிறு மூலம், உயிருடன் பாவாயியை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Updated On: 23 April 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!
  2. நாமக்கல்
    கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி : நாமக்கல் கோழிப்பண்ணைகளில்...
  3. திருவண்ணாமலை
    வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  6. நாமக்கல்
    சித்திரை மாத முதல் சனிக்கிழமை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு முத்தங்கி...
  7. நாமக்கல்
    தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும்: கொமதேக...
  8. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  9. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  10. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?