Begin typing your search above and press return to search.
சொன்னபடி தார்ரோடு போட்டுத்தந்த எம்எல்ஏ : அய்யம்பாளையம் மக்கள் நன்றி
தேர்தல் வாக்குறுதிப்படி, அய்யம்பாளையத்தில் தார் ரோடு வசதி செய்து கொடுத்த, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கத்தை சந்தித்து, பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
HIGHLIGHTS
நாமக்கல் நகராட்சி, அய்யம்பாளையத்தில் உள்ள தொட்டியந்தோட்டம் ரோடு சுமார் 80 ஆண்டுகளாக மண் சாலையாக இருந்து வந்தது. கடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது, இப்பகுதிக்கு ஓட்டுக் கேட்க வந்த எம்எல்ஏ ராமலிங்கம், தேர்தலில் வெற்றி பெற்றால் இந்த சாலையை, தார் ரோடாக போட்டுத் தருவதாக உறுதியளித்தார்.
தற்போது, அவரது நடவடிக்கையால் அந்த ரோடு தார் ரோடாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், அய்யம்பாளையம் அரசு பள்ளி முதல், மயானம் வரை புதிய ரோடுஅமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஊர் பொதுமக்கள், எம்எல்ஏ ராமலிங்கத்தை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.