/* */

ச.பே.புதூர் பொது நல அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கல்

நாமக்கல் ச.பே.புதூர் பொதுமக்கள் நல அறக்கட்டளை சார்பில் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

ச.பே.புதூர் பொது நல அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கல்
X

நாமக்கல் ச.பே.புதூர் பொது நல அறக்கட்டளை சார்பில் 10, 12ம் பொதுத் தேர்வுகளில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

நாமக்கல், சந்தைப்பேட்டைப்புதூர் பொதுமக்கள் பொது நல அறக்கட்டளை சார்பில், 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. அறக்கட்டளை தலைவர் மணி தலைமை வகித்தார். செயலாளர் டாக்டர் இளங்கோ, பொருளாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம், இண்டாம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரூ. 7,500, மூன்றாம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் பரிசுகள் வழங்கப்பட்டன. கல்வி உதவித்ததொகையாக 42 ஏழை மாணவ மாணவிகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1.26 லட்சம் வழங்கப்பட்டது.

அறக்கட்டளை துணைத்தலைவர் தென்னரசு, துணை செயலாளர் பாபு, உதவி தலைவர் சேகர், உதவி செயலாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Aug 2022 2:00 AM GMT

Related News