Begin typing your search above and press return to search.
நாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 1,063 பேருக்கு பணி நியமன கடிதம்
நாமக்கல்லில் நடைபெற்ற தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 1,063 பேருக்கு பணி நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையம் சார்பில், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
ராஜேஷ்குமார் எம்.பி, ராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, முகாமில் பங்கேற்று வேலை வாய்ப்பு பெற்ற 1,063 பேருக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பிரியா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பங்காரு உள்ளிட்டோர் கலந்துகொாண்டனர்.