Begin typing your search above and press return to search.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாற்றுத்திறனாளி உட்பட 51 பேர் தேர்வு
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெற்ற தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 51 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் நடைபெற்ற, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமிற்கு, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஷீலா தலைமை வகித்தார்.
முகாமில் 19 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, மேனேஜர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், அக்கவுண்டண்ட், டைப்பிஸ்ட், கேஷியர், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டெண்ட் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்தனர்.
மாவட்டம் முழுவதும் இருந்து, 80 பணி நாடுனர்கள் முகாமில் கலந்து கொண்டனர். அவர்களில், தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில், 46 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 5 மாற்றுத்திறனாளிகளும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். முகாமில் மொத்தம் 51 பேர் பல்வேறு நிறுவனங்களுக்கான தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.